உன் பிம்பம்
கலையாமல் இருக்க மழைத்துளிகளைக்
கைகளில் சேகரித்தேன்.
மனதில்
அடைக்க வேண்டியவனைக் கைகளில் அடைக்க நினைக்கிறேயே என்று கோபித்துக்கொண்டு வழிந்தோடியது மழைநீர்.
மறுநாள் உன்னைச்
சந்திக்க வந்தேன்.
“நேற்று மழையில்
நனைந்தாயா?” என்றாய்.
“ஆமாம். மழைத்துளிகளில்
உன்னைக் கண்டேன்” என்றேன் செல்லக் குறும்போடு.
“ஓஹோ. என் ஜுரத்திற்கு
நீதான் காரணமா?” என்று செல்லமாய்க் கோபித்துக் கொண்டாய்.
“உனக்கு ஜுரமா?
பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியலையே” சந்தேகமாய்ப் பார்த்தேன்.
“என்ன சந்தேகப்
பார்வை இது? வேண்டுமென்றால் நீயே பார்” என்று என்னைக் கட்டிக்கொண்டாய்.
உன் காதோரமாய் மெதுவாய்ச் சொன்னேன். உனக்கு காதல் ஜூரம் என்று.
நீ புன்னகைத்தாய்.
உன் காதோரமாய் மெதுவாய்ச் சொன்னேன். உனக்கு காதல் ஜூரம் என்று.
நீ புன்னகைத்தாய்.
அங்கே காதல் மழை
பொழியத் துவங்கியது.
So romantic :)
ReplyDelete