குறும்புத்தனத்தின் மொத்த உருவமடா நீ.
நான் கண்ணனின் பக்தை. அதனால் தான் கண்ணன் அவனைப் போலவே குறும்புத்தனத்தில் சிறந்த உன்னை எனக்கு கணவனாக அனுப்பப் போகிறானோ?
நீ கொடுக்கும் அன்புத் தொல்லைகளோ ஏராளம்.
காதலை சொல்ல இடமில்லாதவனைப் போல சாலையின் நடுவே நின்று என்னைக் காதலிப்பதாக கத்துகிறாய்.
நான் பேசும் பொழுது ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் நடுவே என்னை இடைமறித்து “ஐ லவ் யூ” என்கிறாய்.
பேசாமல் மெளனமாய் நின்றால் “நீ அமைதியாக இருந்தாலும் ஐ லவ் யூ” என்கிறாய்.
அய்யோ... என் காதல் பைத்தியமே...
உன் காதல் இம்சையில் என்னையே நான் மறந்து போகிறேனடா.
நேற்று வீட்டை விட்டு வெளியே கிளம்புகையில் என் செருப்புக்கு பதிலாக வேறு செருப்பை அணிந்து சென்றேன்.
என்னிடம் பேசுபவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை சரியாக கவனிக்காமல் சம்மந்தமே இல்லாத பதில்களைச் சொல்லி கேலி பேச்சுக்கு ஆளாகினேன்.
நீ சொல்லும் ”ஐ லவ் யூ” என் காதுகளை விட்டு நீங்க மறுத்து, என் வேலைகளை இம்சிக்கிறது.
இப்போதே இப்படியென்றால் திருமணத்திற்குப் பின் உன்னை எப்படி சமாளிப்பது என்பதே என் ஒரே கேள்வி.
பதில் சொல்வாயா?
இல்லை இதற்கும் “ஐ லவ் யூ” சொல்லி என் வாயை அடைக்கப் போகிறாயா?
Really cute :)
ReplyDelete:)
ReplyDeleteஅழகு..!
ReplyDelete