உனக்கு நான் தான் காபி போடுவேன் என்று அடம்பிடித்தாய்.
நீ காபி போடும் பொழுது நான் உடனிருக்கக் கூடாது என்று நிபந்தனையும் விதித்தாய்.
உன் கண்களைப் பார்த்தேன். காதல் உன் கண்களில் நின்று என்னை எட்டிப் பார்த்துக் கேலியாய் சிரித்தது.
உன் காதல் விளையாட்டு தொடங்கிவிட்டது என்று என் காதலுக்கு புரியாதா என்ன.
உன் காதல் விளையாட்டு தொடங்கிவிட்டது என்று என் காதலுக்கு புரியாதா என்ன.
வழக்கம் போல் என்னிடம் விளையாடுவதாக நினைத்துக்கொண்டு காபியில் வேண்டுமென்றே சர்க்கரைப் போட மறந்தாய்.
நான் எதுவும் சொல்லாமல் குடிப்பதைப் பார்த்துப் பதறிப்போய் “அய்யோ அதில் சர்க்கரை போடவில்லையடி” என்றாய்.
”அட மடையா... சர்க்கரைப் போடவில்லையென்றால் என்ன?? உன் காதலைக் கலந்து போட்ட காபி என்ன கசக்கவா போகிறது? இதைப்போல ஒரு காபியை இதுவரை நான் குடித்ததே இல்லை தெரியுமா. திருமணத்திற்குப் பிறகு தினமும் இப்படியே உன் காதலை கலந்து எனக்கு காபி போட்டுக் கொடுப்பாயா?” என்றேன்.
உன் காதல் என்ன நினைத்ததோ தெரியவில்லை. உன்னை என் பக்கமாக தள்ளி என்னை அணைத்துக்கொள்ளச் செய்தது.
வர வர நீயும், உன் காதலும் செய்யும் அட்டகாசங்கள் தாங்க முடிவதில்லை.
ezhuthurathula unga attakaasam thaanga mudila :)
ReplyDelete:)
ReplyDelete